2 19
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியம் தேர்தலில் போட்டியிடுகிறதா : கேள்வி எழுப்பிய அநுர

Share

சர்வதேச நாணய நிதியம் தேர்தலில் போட்டியிடுகிறதா : கேள்வி எழுப்பிய அநுர

சர்வதேச நாணய நிதியத்தை (IMF) விவாதத்திற்கு அழைக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனையை ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.

மாறாக, பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதியை நேருக்கு நேர் விவாதம் நடத்த முன்வருமாறு, அவர் புதிய சவாலை விடுத்துள்ளார்.

அம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தை ஏற்பாடு செய்ய முடியும் எனவும், அந்த விவாதத்தில், இரண்டு கட்சிகளின் பொருளாதார கொள்கைகள் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் விவாதிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி விக்ரமசிங்க மேடைகளிலேயே தொடர்ந்து தம்மிடம் கேள்விகளை முன்வைக்கிறார்.

இதனையடுத்து, தாம் அவருடன் பகிரங்க விவாதத்திற்கு சவால் விடுத்தபோதும், அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் வருவேன் என்கிறார்.

அவரின் கூற்றுப்படி சர்வதேச நாணய நிதியம் தேர்தலில் போட்டியிடுகிறதா? என்று எண்ணத் தோன்றுகிறது.

எனவே இந்த விடயத்தில் ரணில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் என்று அநுரகுமார குற்றம் சுமத்தியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...