4 6
இலங்கைசெய்திகள்

தேர்தலுக்கு பணத்தை வாரி இறைக்கும் அனுர: சஜித் தரப்பு எழுப்பியுள்ள கேள்வி

Share

தேர்தலுக்கு பணத்தை வாரி இறைக்கும் அனுர: சஜித் தரப்பு எழுப்பியுள்ள கேள்வி

அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தலுக்காக கோடி கோடியாக பணம் கொட்டுகிறார், அப்படியான அனுரகுமாரவால் கடந்த காலத்தில் ஏன் ஒரு சின்ன உதவியாவது மக்களுக்கு செய்ய முடியாமல் போனது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.

வவுனியா (Vavuniya), வைரவ புளியங்குளத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தொவித்ததாவது, “அன்று கோட்டபாய முஸ்லிம்களின் வாக்கை கொள்ளையடிக்க அலிசப்ரி என்ற ஒருவரை கொண்டு திரிந்தார். அவர் கோட்டபாயவை புகழ்ந்து வாக்கை கொள்ளையடித்தார்.

கடைசியில் எமது மையத்துக்களை எரித்துக் கொண்டிருந்த போதும், எம்மை சிறைக்குள் அடைத்த போதும் அமைச்சுப் பதவியை அலிசப்ரிக்கு கோட்டபாய வழங்கினார்.

அது போலவே அனுரவும் தொப்பி போட்ட முஸ்லிம் மௌலவி ஒருவரை கூட்டிக் கொண்டு திரிந்து வாக்கை கொள்ளையடிக்கப் பார்க்கிறார்.என்றார்.

 

Share
தொடர்புடையது
25 683c090ba0cec
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரைக் கூறி இனவாதம் பேசும் சரத் பொன்சேகா..

வடக்கில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுவது தவறான விடயமாகும், அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என...

3 1
இலங்கைசெய்திகள்

மஹிந்தானந்தவிற்காக களத்தில் குதித்த பௌத்த பிக்குகள்

முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தண்டிக்கப்பட்டமையை பட்டாசு கொளுத்தி கொண்டாடிய நபர்களுக்கு கண்டனம்...

2 1
இலங்கைசெய்திகள்

தேசபந்துவிடம் குறுக்கு விசாரணை! தயாராகிறது குழு..

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் குறுக்கு விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது....

25 683bfa124dd82
இலங்கைசெய்திகள்

குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய்த்தாக்கங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழந்தைகளிடையே காய்ச்சல், சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின்...