2 27
இலங்கைசெய்திகள்

தமிழ் பொது வேட்பாளர் குறித்து தனது கருத்தை கூறிய அநுர

Share

தமிழ் பொது வேட்பாளர் குறித்து தனது கருத்தை கூறிய அநுர

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது அரசியல் சமூக அமைப்புக்கும் தமது தரப்பிலிருந்து ஒரு வேட்பாளரை முன்னிறுத்தும் உரிமை உள்ளது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்ட அநுரகுமாரவிடம் தமிழ் பொது வேட்பாளர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு வேட்பாளரை நியமிப்பது அவர்களின் ஜனநாயக உரிமை ஆகும். எனினும், தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் எனும் அடிப்படையில் நாம் நமது அரசியலை நகர்த்த வேண்டிய தேவையில்லை.

குறித்த சமூகங்களுக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கும். தெற்கிலிருந்து உருவான எந்தவொரு அரசாங்கமும் இதுவரை காலமும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யாததால் பொது வேட்பாளர் என்ற விடயத்தின் ஊடாக கவனத்தை ஈர்க்க அவர்கள் தீர்மானித்திருக்கலாம்.

இருப்பினும், நாம் பிரிவினை வாத அரசியலை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்த அரசியலை முன்னகர்த்த வேண்டும்.

எவ்வாறாயினும் இதன் மூலம் அவர்கள் கூற முற்படும் செய்திகள் மற்றும் கருத்துக்களை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

தமிழ் பொது வேட்பாளர் பெறும் வாக்குகளின் மூலம் தமிழ் சமூகம் எதிர்ப்பார்க்கும் விடயங்களையும் எம்மால் மதிப்பிட முடியும்” எனக் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...