18 3 scaled
இலங்கைசெய்திகள்

கனடாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் அனுர

Share

கனடாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் அனுர

தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுர குமார திசாநாயக்க கனடாவிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த விஜயத்தினை அவர் இன்று (20.03.2024) மாலை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கனடாவாழ் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் கனேடிய குழுவினால் பிரதானமான இரு மக்கள் சந்திப்புக்களின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் முதலாவது சந்திப்பு எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கனடாவின் டொரண்டோ நகரில் இடம்பெறவுள்ளது.

அதேநேரம், இரண்டாவது சந்திப்பானது, எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வான்கூவர் நகரில் நடைபெறவுள்ளது.

இதற்கு மேலதிகமாக அவர் கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களுடன் சகோதரத்துவ சந்திப்புகளிலும் ஈடுபட போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...