18 3 scaled
இலங்கைசெய்திகள்

கனடாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் அனுர

Share

கனடாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் அனுர

தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுர குமார திசாநாயக்க கனடாவிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த விஜயத்தினை அவர் இன்று (20.03.2024) மாலை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கனடாவாழ் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் கனேடிய குழுவினால் பிரதானமான இரு மக்கள் சந்திப்புக்களின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் முதலாவது சந்திப்பு எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கனடாவின் டொரண்டோ நகரில் இடம்பெறவுள்ளது.

அதேநேரம், இரண்டாவது சந்திப்பானது, எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வான்கூவர் நகரில் நடைபெறவுள்ளது.

இதற்கு மேலதிகமாக அவர் கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களுடன் சகோதரத்துவ சந்திப்புகளிலும் ஈடுபட போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...