16 1
இலங்கைசெய்திகள்

ரணிலை பின்தொடரும் அநுர! எதிர்க்கட்சியைக் கோரும் ராஜபக்சர்கள்

Share

ரணிலை பின்தொடரும் அநுர! எதிர்க்கட்சியைக் கோரும் ராஜபக்சர்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) பொருளாதார கொள்கையையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) முன்னெடுக்கிறார். தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கி வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் தான் ஜனாதிபதி செயற்படுகிறார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajpaksa) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசியல் ரீதியில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். ஜனாதிபதித் தேர்தலில் போது எம்முடன் இருந்தவர்கள் குறுகிய அரசியல் தேவைகளுக்காக எம்மை விட்டுச் சென்றார்கள். அவ்வாறு சென்றவர்கள் இன்று அரசியலில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.

பொதுத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளோம். ராஜபக்சர்கள் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்கள். ஆகவே நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி பதவியை பொதுஜன பெரமுனவுக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களையும் விமர்சித்தார். ஆகவே இம்முறை அவர் அரசாங்கத்தை நிர்வகிக்கட்டும். அப்போது சொல்வது இலகு செய்வது கடினம் என்பதை அறிவார்.

ராஜபக்சர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை மறுசீரமைப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆனால் பதவியேற்று ஓரிரு நாட்களில் நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை எவ்வித மாற்றமுமில்லாமல் தொடர்வதாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காக கடுமையான தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நடுத்தர மக்களின் நலனை கருத்திற் கொண்டு எவ்வித நடவடிக்கைகளையும் ஜனாதிபதி எடுக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கையையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கிறார். தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கி வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் தான் ஜனாதிபதி செயற்படுகிறார்.

பொதுத்தேர்தலுக்கு பின்னர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக குறிப்பிடுவது மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும். வெறுப்பினை முன்னிலைப்படுத்தி கைப்பற்றிய ஆட்சியை சிறந்த முறையில் முன்கொண்டு செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...