16 1
இலங்கைசெய்திகள்

ரணிலை பின்தொடரும் அநுர! எதிர்க்கட்சியைக் கோரும் ராஜபக்சர்கள்

Share

ரணிலை பின்தொடரும் அநுர! எதிர்க்கட்சியைக் கோரும் ராஜபக்சர்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) பொருளாதார கொள்கையையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) முன்னெடுக்கிறார். தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கி வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் தான் ஜனாதிபதி செயற்படுகிறார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajpaksa) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசியல் ரீதியில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். ஜனாதிபதித் தேர்தலில் போது எம்முடன் இருந்தவர்கள் குறுகிய அரசியல் தேவைகளுக்காக எம்மை விட்டுச் சென்றார்கள். அவ்வாறு சென்றவர்கள் இன்று அரசியலில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.

பொதுத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளோம். ராஜபக்சர்கள் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்கள். ஆகவே நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி பதவியை பொதுஜன பெரமுனவுக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களையும் விமர்சித்தார். ஆகவே இம்முறை அவர் அரசாங்கத்தை நிர்வகிக்கட்டும். அப்போது சொல்வது இலகு செய்வது கடினம் என்பதை அறிவார்.

ராஜபக்சர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை மறுசீரமைப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆனால் பதவியேற்று ஓரிரு நாட்களில் நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை எவ்வித மாற்றமுமில்லாமல் தொடர்வதாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காக கடுமையான தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நடுத்தர மக்களின் நலனை கருத்திற் கொண்டு எவ்வித நடவடிக்கைகளையும் ஜனாதிபதி எடுக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கையையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கிறார். தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கி வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் தான் ஜனாதிபதி செயற்படுகிறார்.

பொதுத்தேர்தலுக்கு பின்னர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக குறிப்பிடுவது மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும். வெறுப்பினை முன்னிலைப்படுத்தி கைப்பற்றிய ஆட்சியை சிறந்த முறையில் முன்கொண்டு செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...