8 38
இலங்கைசெய்திகள்

அநுரவிற்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி

Share

அநுரவிற்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி

இலங்கையின் (Sri Lanka) ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரகுமார திசாநாயகவுக்கு (Anura Kumara Dissanayake) அமெரிக்க (America) ஜனாதிபதி ஜோ பைடன் ( Joe Biden) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் தனது வாழ்த்து செய்தியினை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில், அநுரவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்த அநுரவுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோ பைடனிற்கு நன்றி தெரிவித்து அநுர வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் அன்பான நல்வாழ்த்துக்களை நான் பாராட்டுகிறேன்.

எனது தலைமையிலான இலங்கையானது எமது நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதற்காக அமெரிக்காவுடன் நெருக்கமாக செயற்படும்.

அமைதியான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான எனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...