1 34
இலங்கைசெய்திகள்

அநுரவின் வெற்றியால் அமெரிக்க – இந்திய புலனாய்வு துறைக்கு காத்திருந்த ஏமாற்றம்

Share

அநுரவின் வெற்றியால் அமெரிக்க – இந்திய புலனாய்வு துறைக்கு காத்திருந்த ஏமாற்றம்

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த வரலாற்று மாற்றம் அமெரிக்க, இந்திய புலனாய்வு துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அநுரகுமார திசாநாயக்கவின் புலனாய்வு துறையும் எதிர்பார்க்காத விதத்தில் அதிக்கூடிய வாக்கு வித்தியாசத்தில் அநுர ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

அதாவது தேசிய மக்கள் சக்தியின் (jvp) இலங்கை அரசியலில் முதல் எதிரியாக காணப்படும் நாடு இந்தியா. கடந்த வரலாற்றில் 1980 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கினை இரண்டாக பிரித்து இலங்கை மண்ணிலிருந்து இந்திய இராணுவத்தை விரட்டுவதே இக்கட்சியின் முதலாவது அனுகூலமாக காணப்பட்டது.

21 ஆம் நூற்றாண்டில் அவர்களை சுட்டிக்கொல்ல சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் இறக்கப்பட்டவர்களும் இந்திய இராணுவத்திரே. எனவே இந்திய இராணுவத்தினரை நாட்டிலிருந்து விரட்டுவதே தேசிய மக்கள் சக்தியின் முதல் கோரிக்கையாக காணப்பட்டது.

தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன், இரண்டு போராட்டங்களில் நேரடியாக பாதிக்கப்பட்ட பின்னணியில் இந்தியா உள்ளதென்பதினை நன்கும் அறிந்துள்ளனர்.

அந்த வகையில் முதலில் அரகலய போராட்டத்தின ஊடாக உறவினை பேணிய அமெரிக்காவிற்கு அந்த உறவினை தொடர்ந்தும் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தற்போது இலங்கை அரசியல் மாற்றத்தினால் அநுர குமாரவை தமது பக்கம் கொண்டுவரும் நிர்ப்பந்தம் அமெரிக்க, இந்தியாவிற்கு உள்ளதுடன், சீனா அமைதியான முறையில் நகர்வுகளை முன்னெடுப்பதாகவும் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...