13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

Share

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கொழும்புக்கு இது போன்ற ஒன்றைச் செய்திருக்க வேண்டும் என்று கூறிய ரணில் விக்ரமசிங்க, தான் சொன்னது போல் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாததால் மக்கள் பிளவுபட்டுள்ளனர் என்றார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட்டோம். இதை ஒரு தொடக்கமாகக் கருதலாம்.

சில பகுதிகளில் முடிவுகள் நன்றாக உள்ளன. நாம் திருப்தி அடையலாம். இப்போது ஐக்கிய தேசியக் கட்சி வேலை செய்ய வேண்டும்.

இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி மக்களுக்கு ஏதாவது ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். நான் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் பங்கேற்கவில்லை.

இது இளம் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. இதில் நல்ல விஷயங்களும் உள்ளன, தோல்விகளும் உள்ளன.

தற்போது நம்மிடம் உள்ள பலத்தைக் கொண்டு எப்படி முன்னேறுவது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

யானை சின்ன வேட்பாளர் என பரிந்துரைக்கப்படும் போது மக்கள் வாக்களிக்க வருவார்கள் என்று சிலர் கூறினர்.

யானை சின்ன வேட்பாளர் என்பதால் மட்டும் மக்கள் வாக்களிக்க வரமாட்டார்கள் என்று இப்போது தெரிகிறது. இப்போது நாம் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்குப் பிறகு, இளைய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
dom penzionera 2
செய்திகள்உலகம்

போஸ்னியாவில் முதியோர் இல்லத்தில் கோரத் தீ விபத்து: 11 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 04) மாலை ஏற்பட்ட...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...