2 30
இலங்கைசெய்திகள்

சந்திரிக்கா – ரணில் நேரடி மோதல்! ரணில் – மகிந்தவை கைது செய்வதில் நெருக்கடி

Share

சந்திரிக்கா – ரணில் நேரடி மோதல்! ரணில் – மகிந்தவை கைது செய்வதில் நெருக்கடி

மகிந்த மற்றும் ரணில் ஆகியோர் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இந்த அரசாங்கத்தில் மிக அதிகமாக காணப்படுகின்றது என்று புலனாய்வு செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான விடயத்தை முதலில் அநுர குமார திஸாநாயக்க கையில் எடுக்கப் போகின்றார். அதனையடுத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் நடவடிக்கைகளை அநுர தரப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நாட்டிற்குள் அந்நிய நாடுகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக ரணில் மற்றும் மகிந்தவை கைது செய்வதில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முட்டுக்கட்டையாக இருக்கும்.

சாட்சிகள் பலமாக இருந்தால் கோட்டாபய ராஜபக்ச உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்மையில் கொழும்பில் வைத்து முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஊழல் தொடர்பான விடயங்களில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...