11 4
இலங்கைசெய்திகள்

அநுரவின் அரசாங்கம் விடுக்கவுள்ள முக்கிய அறிவிப்பு

Share

2025 ஜூன் 30 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தனது நிதி உத்தி குறித்து சிறப்பு அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அவைத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவா அல்லது பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயரத்னவா விடுப்பார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நிதி நிலைமை குறித்து ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதன்படி விவாதம் அன்றைய தினம் முற்பகல் 10:00 மணிக்கு தொடங்கி மாலை 4:30 மணி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2025 ஜூலை 9ஆம் திகதியன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நாடாளுமன்றம் மற்றொரு விவாதத்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...

Untitled 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர் கைது: சாரதி அனுமதிப்பத்திரமும் இல்லை!

சமூக ஊடகங்களில் வைரலாகிய காணொளி காட்சிகளின் அடிப்படையில், வீதி சமிக்ஞைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு படுகொலை: கொலையாளிகளுக்கு கடும் தண்டனை கோரி பாரிய மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கொள்ளை மற்றும் கொடூரக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...