1 1 23
இலங்கைசெய்திகள்

கட்டுக்கதைகளை நிஜமாக்குவதற்கு முயற்சிக்கும் அநுர அரசு : முன்னாள் எம்.பி சாடல்

Share

கட்டுக்கதைகளை நிஜமாக்குவதற்கு முயற்சிக்கும் அநுர அரசு : முன்னாள் எம்.பி சாடல்

தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளை நிஜமாக்குவதற்காக தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தற்போது பாடுபட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் (Charitha Herath) தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள (Colombo)எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ”தேசிய மக்கள் சக்தியால் உருவாக்கப்பட்ட கடதாசி மாளிகையால் அவர்களது அரசாங்கத்துக்கு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளை தற்போது உண்மையாக நடைமுறைப்படுத்துவதற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறே சபாநாயகரின் கல்வித் தகைமை குறித்த பிரச்சினையும் தோன்றியுள்ளது.

இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரிசிப் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இம்முறை இப்பிரச்சினை உக்கிரமடைந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் (Anura Kumara Dissanayake) இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் நேரடியாக கலந்துரையாட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

வன விலங்குகளால் விவசாயத்துக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இதனால் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பாதிப்புக்களை முகாமைத்துவம் செய்யவேண்டியது அவசியமாகும்.

வன விலங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய நடைமுறைகளைப் பின்பற்ற முடியுமா அல்லது வேறு ஏதேனும் நீண்ட கால நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமா என்பது தொடர்பில் அரசாங்கம் துறைசார் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்“ என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...