24
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பதவியை சுமந்திரன் பெறவுள்ளதாக தகவல்

Share

அநுர அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பதவியை சுமந்திரன் பெறவுள்ளதாக தகவல்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன், இலங்கை தமிழரசு கட்சி இணைந்து செயற்படும் என, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அந்த அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு எம்.ஏ.சுமந்திரனுடன் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை அமுல்படுத்துதல், போர் குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு தண்டனை வழங்குதல், சமஷ்டி அரசியலமைப்பை கொண்டு வருதல் போன்ற நிபந்தனைகளின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

“குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் உயர் பதவிகளில் இருந்து உடனடியாக நீக்கம்” என்ற தலைப்பில் பொது மனு ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ரவி சேனவிரத்தை நீக்குமாறு இந்த பொது மனுவில் கோரப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு ஒரு பெரிய கடமையை செய்ய நாம் இன்று ஒன்று சேர்ந்துள்ளோம். ஜனாதிபதி பதவியேற்ற முதல் மாதத்திலேயே அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

எதிர்க்கட்சியில் அவர் எடுத்த நிலைப்பாடு பொய்யானது என நிரூபிக்கப்பட்டதால், சனல் 4, ஈஸ்டர் தாக்குதல் நிகழ்ச்சி குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கையை மறைக்க முயன்றார்.

மேலும் அவரது அரசியல் கூட்டாளிகள் இருவர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதால், விசாரணைக் குழுவின் அறிக்கையை ஜனாதிபதி மூடிவிட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...