இலங்கைசெய்திகள்

புதிய அரசியலமைப்பிற்கு தற்போது அவசியமில்லை – அநுர அரசு அதிரடி அறிவிப்பு

Share
6 7
Share

புதிய அரசியலமைப்பை அவசரமாக கொண்டு வர வேண்டிய தேவை தற்போது கிடையாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை நேற்று (5.2.2025) அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலவரத்துக்கு இணங்க பொருளாதாரத்தைப் பலப்படுத்தி நாட்டை ஸ்தீரப்படுத்துவதே பிரதான விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பில் மாற்றமொன்று எமக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணைக்கு இணங்க நிச்சயமாக இடம்பெறும்.

ஆனால் அவசர அவசரமாக அரசமைப்பொன்றை உருவாக்க நாம் தற்போது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டரை மாதங்கள் தான் ஆகின்றன. எமக்கு பொருளாதார சவாலை நிவர்த்தி செய்ய வேண்டிய பிரதான தேவை உள்ளது.

முதலில் நாட்டின் பொருளாதாரத்தை சீரான நிலைமைக்கு கொண்டு வர வேண்டும்.

இதற்கு இன்னும் சில காலங்கள் எடுக்கும் சர்வதேச ரீதியாகவும் சில சவால்கள் காணப்படுகின்றன.

எனினும் நேரத்தை இழுத்தடிக்காமல் உரிய காலத்தில் புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்போம். இப்போதே அனைத்தையும் செய்து குழப்பிக் கொள்ளத் தேவையில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

 

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...