23
இலங்கைசெய்திகள்

சுஜீவ சேனசிங்கவின் கொள்ளுப்பிட்டி வீட்டில் திடீர் சோதனை

Share

சுஜீவ சேனசிங்கவின் கொள்ளுப்பிட்டி வீட்டில் திடீர் சோதனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின்(Sujeewa Senasinghe ) கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை தொடர்பில் பொலிஸில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தான் வீட்டில் இல்லாத போது பொலிஸ் குழு என கூறிக்கொண்டு சிலர் தனது வீட்டை சோதனையிட்டதாக குற்றம் சுமத்தி சுஜீவ சேனசிங்கவினால் குருந்துவத்தை பொலிஸில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் உண்மையாகவே பொலிஸ் அதிகாரிகளா என்பதை கண்டறியுமாறும் முறைப்பாட்டின் மூலம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின்(Sujeewa Senasinghe )கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டுக்கு, ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

பாணந்துறை வலன ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சென்று இன்று(05.11.2024) அவசர சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய சீருடைகளின் பாகங்கள் மற்றும் வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் நோக்கில் சோதனை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட அனுமதியின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரிகள் குழு சென்று சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரிகள் குழு வீட்டிற்குச் சென்றபோது சுஜீவ சேனசிங்க வீட்டில் இல்லை எனவும், வேலைக்காரர் மட்டும் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த தேடுதல் நடவடிக்கைகள் இரண்டு மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு ஊழியரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...