9 48
இலங்கைசெய்திகள்

சுகாதாரத்துறையினர் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

Share

சுகாதாரத்துறையினர் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உணவு மற்றும் பானங்களை கொள்வனவு செய்யும் போது மற்றும் உட்கொள்ளும் போது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக ஆலோசகர் லஹிரு கொடித்துவக்கு, டெங்கு பரவுவதைத் தடுக்க நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுமாறு பிரதேசவாசிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரை 45,448 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேல் மாகாணத்தில் மாத்திரம் 19,487 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் டெங்கு காய்ச்சலால் 22 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
dinamani 2025 11 28 gas8xazv AP25332344411320 750x430 1
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் புயல் வெள்ளப் பலி 631 ஆக உயர்வு: மீட்புப் பணிகள் தொடர்கின்றன!

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமத்ரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல்கள் மற்றும் கடும்...

articles2FBeZFwQ6t4jz5lsonfdUc
செய்திகள்இலங்கை

நுவரெலியா வெள்ளம்: 21 வெளிநாட்டவர்கள் விமானப்படையின் MI-17 ஹெலிகொப்டர் மூலம் துரிதமாக மீட்பு!

நுவரெலியா பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் (Severe Floods) இடம்பெயர்ந்து சிக்கித் தவித்த 21 வெளிநாட்டவர்கள்,...

articles2FWdcbeAlRn6LMdiTyRA63
செய்திகள்இலங்கை

இலங்கையில் நிகழ்நேர இலத்திரனியல் சிட்டை  முறைமைக்கு அமைச்சரவை ஒப்புதல்!

இலங்கையில் நிகழ்நேர இலத்திரனியல் சிட்டை (e-invoice) முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை...

images 9
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் வெள்ளத்தால் அல்லலுறும் யானைகள்: உணவின்றி மனித குடியிருப்புகளை நோக்கிப் படையெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நீரில்...