tamilni 215 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பு

Share

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) நாட்டிலுள்ள மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளின் தொகுப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை இறுதி செய்வதற்கு, தற்போது ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், இலங்கையில் உள்ள சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை மனித உரிமை ஆணையம் சந்தித்துள்ளது.

இதன்போது, சிவில் சமூகப் பிரதிநிதிகள் தமது அனுபவங்கள், கவலைகள் மற்றும் பரிந்துரைகளை ஆணைக்குழுவுடன் பகிர்ந்து கொள்வதற்கும், ஆணைக்குழுவின் தற்போதைய வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்ததாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் நிறைவேற்றுதல் ஆகியவற்றை வலுப்படுத்துவதில், தம்முடன் நெருக்கமாக பணியாற்றுமாறு சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அழைப்பு விடுத்துள்ளதாகவும், குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...