tamilni 215 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பு

Share

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) நாட்டிலுள்ள மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளின் தொகுப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை இறுதி செய்வதற்கு, தற்போது ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், இலங்கையில் உள்ள சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை மனித உரிமை ஆணையம் சந்தித்துள்ளது.

இதன்போது, சிவில் சமூகப் பிரதிநிதிகள் தமது அனுபவங்கள், கவலைகள் மற்றும் பரிந்துரைகளை ஆணைக்குழுவுடன் பகிர்ந்து கொள்வதற்கும், ஆணைக்குழுவின் தற்போதைய வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்ததாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் நிறைவேற்றுதல் ஆகியவற்றை வலுப்படுத்துவதில், தம்முடன் நெருக்கமாக பணியாற்றுமாறு சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அழைப்பு விடுத்துள்ளதாகவும், குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...