15 10
இலங்கைசெய்திகள்

நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Share

நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாளைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பில் நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 3 மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த நிலையில் உள்ளதன் காரணமாக நாளை முதல் மின்வெட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் நாளைய தினம்(13) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா இல்லையா என்பது குறித்து இன்று (12) பிற்பகல் தீர்மானிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) தெரிவித்துள்ளது.

அத்துடன், நாளைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன, ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை(09) ஏற்பட்ட மின்வெட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

அரச தரப்பு மின்வெட்டுக்கு காரணம் குரங்கு என்றும் பின்னர் நுரைச்சோலையில் ஏற்பட்ட பழுது என தெரிவித்தாலும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துக்கள் மாறுபட்டதாக அமைந்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் (12) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...