இலங்கைசெய்திகள்

நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Share
15 10
Share

நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாளைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பில் நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 3 மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த நிலையில் உள்ளதன் காரணமாக நாளை முதல் மின்வெட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் நாளைய தினம்(13) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா இல்லையா என்பது குறித்து இன்று (12) பிற்பகல் தீர்மானிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) தெரிவித்துள்ளது.

அத்துடன், நாளைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன, ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை(09) ஏற்பட்ட மின்வெட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

அரச தரப்பு மின்வெட்டுக்கு காரணம் குரங்கு என்றும் பின்னர் நுரைச்சோலையில் ஏற்பட்ட பழுது என தெரிவித்தாலும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துக்கள் மாறுபட்டதாக அமைந்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் (12) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...