19 17
இலங்கைசெய்திகள்

லங்கா சதொச நிறுவனம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Share

லங்கா சதொச நிறுவனம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

லங்கா சதொச நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 93 மில்லியன் நிகர இலாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

லங்கா சதொச நிறுவனத்தின் நிதி நிலைமைகளின் வெளிப்படைத்தன்மை குறித்து மக்களுக்குத் தெரிவிக்க அனைத்து தகவல் இணையத்தளமும் (www.lankasathosa.org) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சதொச நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 26774 மில்லியன் நிகர வருமானத்தை ஈட்டியுள்ளது.

இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நான்கு வீதம் அல்லது 837 மில்லியன் வருமான வளர்ச்சியாகும். மேலும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டின் முடிவில், நிறுவனம் 93 மில்லியன் நிகர இலாபத்தை ஈட்டியுள்ளது.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் 333 மில்லியன் இழப்புகள் பதிவாகியுள்ளன. அதாவது 2023ஆம் ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நட்டம் 108 வீதத்தால் குறைந்துள்ளது.

2024 ஜனவரியில் இருந்து ஊழியர்களின் சம்பளம் மாதாந்தம் பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும் அரச திறைசேரியில் இருந்து எந்தவிதமான நிதி ஒதுக்கீடும் இல்லாத நிலையிலும் முதல் ஆறு மாதங்களில் 93 மில்லியன் இலாபத்தை ஈட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....