இலங்கைசெய்திகள்

அடுத்த ஆண்டுமுதல் அறிமுகமாகும் புதிய இரண்டு வரிகள்

Share
rtjy 111 scaled
Share

அடுத்த ஆண்டுமுதல் அறிமுகமாகும் புதிய இரண்டு வரிகள்

இலங்கையில் வரி வருமானம் எதிர்பார்த்த வருவாய் இலக்குகளை விட குறைந்துள்ளதால் கூடுதல் வருவாயை பெறுவதற்கு அடுத்த ஆண்டு மேலும் இரண்டு புதிய வரிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

செல்வ வரி மற்றும் பரம்பரை வரி என்னும் இரண்டு வரிகளே அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் செல்வ வரி என்பது ஒருவர் கொண்டிருக்கும் சொத்தின் மீது விதிக்கப்படும் வரியாகும். பரம்பரை வரி என்பது ஒருவர், தனது மூதாதையரின் சொத்தில் இருந்து ஈட்டும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் ஒரு வகை வரியாகும்.

நாட்டின் நிதியை மேற்பார்வையிடும் புதிய நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி, அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் இந்த வரிகளுக்குத் தேவையான சட்டத்தை உருவாக்குவதற்கு நிதி அமைச்சகம் பணிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இந்த மேறபார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழுவின் அறிக்கையின்படி, அரசாங்க செலவினங்கள் வருவாயை விட அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் பாதியான ஜனவரி முதல் ஜூன் வரை, மூன்று முக்கிய நிறுவனங்களான சுங்கம், உள்நாட்டு வருமானவரி திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றின் இலக்குகள் கனிக்கப்பட்ட அளவு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உள்நாட்டு இறைவரி திணைக்களம் இந்த பாதி ஆண்டுக்கான 1.667 டிரில்லியன் ரூபாய் வருமான மதிப்பீட்டில் 41.81 சதவிகிதமான 696.94 பில்லியன் ரூபாய்களை மட்டுமே வசூலித்துள்ளது.

அதே நேரத்தில் சுங்கம் இதுவரை மதிப்பிடப்பட்ட 1.22 டிரில்லியனில் 32.79 சதவிகிதமான 400.07 பில்லியன் ரூபாய்களையே வசூலித்துள்ளது.

மதுவரி திணைக்களம் மதிப்பிடப்பட்ட இலக்கான 217 பில்லியனில் 41 சதவீதமான 88.963 பில்லியன் ரூபாய்களை மாத்திரமே வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...