rtjy 111 scaled
இலங்கைசெய்திகள்

அடுத்த ஆண்டுமுதல் அறிமுகமாகும் புதிய இரண்டு வரிகள்

Share

அடுத்த ஆண்டுமுதல் அறிமுகமாகும் புதிய இரண்டு வரிகள்

இலங்கையில் வரி வருமானம் எதிர்பார்த்த வருவாய் இலக்குகளை விட குறைந்துள்ளதால் கூடுதல் வருவாயை பெறுவதற்கு அடுத்த ஆண்டு மேலும் இரண்டு புதிய வரிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

செல்வ வரி மற்றும் பரம்பரை வரி என்னும் இரண்டு வரிகளே அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் செல்வ வரி என்பது ஒருவர் கொண்டிருக்கும் சொத்தின் மீது விதிக்கப்படும் வரியாகும். பரம்பரை வரி என்பது ஒருவர், தனது மூதாதையரின் சொத்தில் இருந்து ஈட்டும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் ஒரு வகை வரியாகும்.

நாட்டின் நிதியை மேற்பார்வையிடும் புதிய நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி, அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் இந்த வரிகளுக்குத் தேவையான சட்டத்தை உருவாக்குவதற்கு நிதி அமைச்சகம் பணிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இந்த மேறபார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழுவின் அறிக்கையின்படி, அரசாங்க செலவினங்கள் வருவாயை விட அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் பாதியான ஜனவரி முதல் ஜூன் வரை, மூன்று முக்கிய நிறுவனங்களான சுங்கம், உள்நாட்டு வருமானவரி திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றின் இலக்குகள் கனிக்கப்பட்ட அளவு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உள்நாட்டு இறைவரி திணைக்களம் இந்த பாதி ஆண்டுக்கான 1.667 டிரில்லியன் ரூபாய் வருமான மதிப்பீட்டில் 41.81 சதவிகிதமான 696.94 பில்லியன் ரூபாய்களை மட்டுமே வசூலித்துள்ளது.

அதே நேரத்தில் சுங்கம் இதுவரை மதிப்பிடப்பட்ட 1.22 டிரில்லியனில் 32.79 சதவிகிதமான 400.07 பில்லியன் ரூபாய்களையே வசூலித்துள்ளது.

மதுவரி திணைக்களம் மதிப்பிடப்பட்ட இலக்கான 217 பில்லியனில் 41 சதவீதமான 88.963 பில்லியன் ரூபாய்களை மாத்திரமே வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...