10 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மயக்க மருந்து விவகாரம்! தொடரும் மரணங்கள்

Share

பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தையொன்று திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேராதனை போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்தை செலுத்தியதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக இதற்கு முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், குழந்தையின் மரணத்திற்கு மயக்க மருந்தே காரணம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் சுகாதார நிபுணர்கள் சங்கங்கள்,பெற்றோர் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயலிழந்த மயக்கமருந்து தடுப்பூசி குழந்தைகளுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும், தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சிக்கல்களினால் இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.

இக்குழந்தையின் மரணத்திற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் எனவும், ஆனால் மயக்க ஊசி செலுத்தியதன் விளைவால் ஏற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும் எனினும் மரணம் ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாண வைத்தியசாலைகளில் சுகாதார உதவியாளர்களான 253 பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு விருது வழங்கும் வைபவம் கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (21) இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அறுஷா அஷ்விதா வெல்கம என்ற இரண்டரை வயது குழந்தை கடந்த 25ம் திகதி உயிரிழந்திருந்தது. திகன ரஜவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இந்த குழந்தை, கடந்த 22 ஆம் திகதி காலில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

எனினும் 6 மணித்தியால சத்திரசிகிச்சைக்கு பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 25ஆம் திகதி குழந்தை உயிரிழந்ததாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இவ்வாறான வலிமிகுந்த சூழ்நிலைகளில் வைத்தியசாலை அதிகாரிகள் குழந்தைகளுக்கு மயக்க மருந்தை வழங்கமாட்டார்கள் என சம்பந்தப்பட்ட வைத்தியசாலை அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், சுகாதாரத்துறை தொடர்பான விடயங்களில் சில ஊடகங்கள் பொய்யாக செய்திகளை வெளியிடுவதாகவும், இது தொடர்பில் ஊடகங்கள் அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 6908adfc6e76f
செய்திகள்இலங்கை

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க, சிறார்களுக்குப் பாலியல் கல்வித் திட்டம் அவசியம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பதற்காக, அவர்களுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித்...

Sri Lankas apparel export
செய்திகள்இலங்கை

ஆடைக் கைத்தொழில் துறையினர் 2026 பட்ஜெட்டை வரவேற்கின்றனர்: ஆனால் நிலையான கொள்கை அமுலாக்கம் அவசியம்!

இலங்கையின் மிகப்பெரிய தொழில்துறை மற்றும் ஏற்றுமதி வருமான ஆதாரமான ஆடைத் தொழில்துறை, 2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின்...

siemens healthineers insights series 43 digital platforms in healthcare
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இலவச சுகாதார சேவை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது: அடுத்த 10 ஆண்டுகளுக்கான மூலோபாயத்தை வகுக்க வழிகாட்டுதல் குழு ஸ்தாபனம்!

இலங்கையின் இலவச சுகாதார சேவையை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக, சுகாதார மற்றும் பொது ஊடக...

ananda wijepala
செய்திகள்இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் எவருமில்லை: அநுராதபுரத்தில் 7,100 பேர் – அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தகவல்!

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் சேவையில் இல்லை என்று...