WhatsApp Image 2024 12 12 at 2.03.44 PM 3
இலங்கைசெய்திகள்

ரணில் சேகரித்த அரிசியைக் கூட அநுரவால் விநியோகிக்க முடியவில்லை : எழுந்துள்ள குற்றச்சாட்டு

Share

ரணில் சேகரித்த அரிசியைக் கூட அநுரவால் விநியோகிக்க முடியவில்லை : எழுந்துள்ள குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) சேகரித்த அரிசியைக் கூட அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) நிர்ணய விலைக்கு விநியோகிக்க முடியாமல் உள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய (Saman Rathnapriya) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று (11) ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ”அரிசி ஆலை உரிமையாளர்கள் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் அரிசியை சந்தைக்கு விடுவிக்காமலிருந்ததால் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்துடன் அரிசி விலையும் ஒரு கிலோ 260 ரூபா வரை அதிகரித்தது.

இதனை கட்டுப்படுத்துவதாகத் தெரிவித்து ஜனாதிபதி அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, அரிசிக்கு விலை நிர்ணயம் செய்வதாக தெரிவித்து, மேசையில் தட்டி, ஒரு கிலோவுக்கு 10 ரூபா அதிகரித்துள்ளார்.

ஜனாதிபதி இதன் மூலம் அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருக்கும் அரிசியை வெளியில் கொண்டுவர முடியாமல் அவர்களுக்கு கிலாேவுக்கு 10 ரூபா அதிகரித்து மண்டியிட்டுள்ளார்.

அத்துடன் அரிசி இறக்குமதி செய்வதாக இருந்தால் அரசாங்கம் ஒன்று எதற்கு என கேட்ட தேசிய மக்கள் சக்தி, தற்போது அரிசி தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த 70 ஆயிரம் கிலோ அரிசி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளது.

ஆனால் இறக்குமதி செய்யும் அரிசியை அரசாங்கம் எத்தனை ரூபாவுக்கு இறக்குமதி செய்கிறது? மக்களுக்கு எத்தனை ரூபாவுக்கு வழங்கப்போகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

இந்தியாவிலிருந்து சுவர்ன அரிசியை இறக்குமதி செய்யப்போவதாகவே அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்தியாவில் இந்த அரிசி ஒரு கிலாே 30 ரூபாவுக்கே விற்பனை செய்யப்படுகிறது. அப்படியானால் இறக்குமதி வரிகள் அடங்கலாக எமது நாட்டில் குறித்த அரிசி கிலாே ஒன்று 110 ரூபாவுக்கே விற்பனை செய்ய வேண்டும்.

ஆனால் அரசாங்கம் தற்போது அரிசிக்கு நிர்ணயித்துள்ள விலையின் பிரகாரம், ஒரு கிலாே 230 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டால் அரசாங்கத்துக்கு ஒரு கிலோவுக்கு 120 ரூபா இலாபம் கிடைக்கிறது.

அதேநேரம் அரிசி இறக்குமதிக்கு தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளதால் அவர்களுக்கும் இந்த இலாபம் கிடைக்கும். அதனால் அரசாங்கம் இறக்குமதி செய்யும் அரிசிக்கான சில்லறை விலையை அறிவிக்க வேண்டும்.

மேலும் 2023இல் ரணில் விக்ரமசிங்க பொருளாதார நெருக்கடி நிலையில் விவசாயிகளுக்கு உரம் நிவாரணம் வழங்கி இரண்டு போகத்தின் மூலம் 58 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி அறுவடை செய்து சேகரித்து வைத்திருந்தார்.

ஆனால் எமது நாட்டில் வருடத்துக்குத் தேவையாக இருப்பது 24 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியாகும். அப்படியானால் எஞ்சிய அரிசி தொகை அரிசி ஆலை உரிமையாளர்களிடமே இருக்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க சேகரித்த அரிசியைக் கூட அநுரகுமார திசாநாயக்கவுக்கு நிர்ணய விலைக்கு விநியோகிக்க முடியாமல், அரிசி ஆலை உரிமையாளர்களுக்குக் கிலோவுக்கு 10 ரூபா அதிகரித்து வழங்கி இருக்கிறார்.

அத்துடன் அரிசி விலை தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பும் வியாபாரிகளுக்கு பிரச்சினையாக மாறியுள்ளது“ என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....