25 684ee39a88ee0
இலங்கைசெய்திகள்

பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட வேண்டிய 37 கைதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Share

பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட வேண்டிய 37 கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து விசாரணையை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுத் துறையினர் இதனை கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணையாளர்கள், கடந்த வாரம் 28 சிறைச்சாலைகளின் பதிவேடு அறைகளை ஆய்வு செய்து சிறைக் கைதிகளின் விபரங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி, ஜனாதிபதி மன்னிப்பு பெற்ற 37 கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்றும், ஒரு கைதி தவறாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட வேண்டிய 37 கைதிகள் இன்னும் சிறைச்சாலைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், விசாரணையாளர்கள், நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலான ஜனாதிபதி மன்னிப்பு மற்றும் பிற பொது மன்னிப்புகளின் கீழ் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில், முழுமையான மதிப்பாய்வை மேற்கொள்ளவுள்ளார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக ஜனாதிபதி மன்னிப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை சிறைச்சாலைத் திணைக்களமே தயாரிக்கிறது.

எனவே, தாம் சமர்ப்பிக்கும் பட்டியலில் உள்ள ஒவ்வொரு கைதியையும் விடுவிப்பதற்குப் பதிலாக, சிறைச்சாலைத் திணைக்களம் மன்னிப்பு வழங்கப்பட்டதாகக் கூறி, மாற்றுக் கைதிகளை விடுவித்துள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
yyyyy
உலகம்செய்திகள்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “(அமெரிக்கா) மோதலில்...

5 4
இலங்கைசெய்திகள்

நீதியரசர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகள்!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை, ஒப்புதல் அளித்துள்ளது....

4 5
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி நேற்று(15) தெஹ்ரானில் உள்ள அவர்களின்...

3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர...