24 8
இலங்கைசெய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆனையிறவு உப்பு விவகாரம்

Share

ஆனையிறவு உப்பளமானது ஆளும் தரப்பினரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு ஆனையிறவு உப்பு என்ற பெயரில் பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட உப்பானது ரஜ உப்பு என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

இந்த செயற்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் மீண்டும் ஆனையிறவு உப்பு என பெயர்மாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கணநாதன் இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி உள்ளிட்ட ஆளும் தரப்பினர் தெரிவித்தனர்.

இருப்பினும் குறித்த உப்பானது ரஜ உப்பு என்ற பெயரிலேயே விநியோகம் செய்யப்படுகின்ற விடயம் தெரிய வந்துள்ளது.

வலி வடக்கு வடபகுதி பல நோக்கு கூட்டுறவு சங்கம் ஊடாக நியாயமான விலையில் உப்பு விநியோகம் இடம்பெறுவதாகவும், அது தனது வேண்டுகோள் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அந்த உப்பு பைகளை வலி வடக்கு வடபகுதி பல நோக்கு கூட்டுறவு சங்கம் தமது உத்தியோகபூர்வ மூகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.அதில் ரஜ உப்பு என்றே காணப்படுகிறது.

இந்த விடயமானது ஆளும் தரப்பினர் மீது மக்களுக்கு மிகுந்த எதிர்ப்பையும், நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்களும், ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெடர்ந்து பொய்யுரைத்து வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த உப்பின் பெயர் ஆனையிறவு உப்பு என இன்னமும் மாற்றம் செய்யப்படவில்லை என, ஆனையிறவு உப்பளத்தில் நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...