23 64010deba1764
இலங்கைசெய்திகள்

தேரர் தாக்கியதில் உயிரிழந்த முதியவர்

Share

தேரர் தாக்கியதில் உயிரிழந்த முதியவர்

குருநாகல் (Kurunegala) – கிரிஉல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாரவிட பிரதேசத்தில் தேரர் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான முதியவர் உயிரிழந்துள்ளதாக கிரிஉல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (08.06.2024) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கிரிஉல்ல மாரவிட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் காயமடைந்த நிலையில், முதியவர் ஒருவர் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் அவரை மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு அவரின் உறவினரான தேரர் ஒருவரினாலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த தேரர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் அவர் விகாரையொன்றில் பணிபுரியாமல் தனது தாயின் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேகநபரான தேரர் தப்பிச் சென்றுள்ளதோடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...