rtjy 85 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசு சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாதது

Share

இலங்கை அரசு சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாதது

இலங்கை அரசு விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளது என ஊடகங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒரு தரப்பினர் இந்த அரசில் அங்கம் வகிக்கின்றனர்.

அதேவேளை, மற்றொரு தரப்பினரை இந்த அரசு பாதுகாத்து வருகின்றது.

இப்படியான அரசு எப்படி சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கமாட்டோம் என்று வெளிநாடுகளுக்கும், சர்வதேச அமைப்புக்களுக்கும் எவ்வாறு சவால் விட முடியும்?

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச விசாரணைக்கு அனுமதி வழங்கமாட்டேன் என்று கூறினாலும், இறுதியாகப் பதவிகளில் இருந்த மூன்று ஜனாதிபதிகளும் (மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச) சர்வதேசம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்பானவர்கள்.

தற்போது அவர்கள் யாரின் பாதுகாப்பில் உள்ளார்கள்? எனவே, தற்போது ஜனாதிபதிப் பதவியில் இருப்பவரும், அவர் தலைமையிலான அரச தரப்பினரும் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...