7 3 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் குளுக்கோமா நோயாளிகள் அதிகரிப்பு

Share

இலங்கையில் குளுக்கோமா நோயாளிகள் அதிகரிப்பு

உலக தரவு பகுப்பாய்வு அறிக்கைகளின்படி, இலங்கையில் குளுக்கோமா பாதிப்பு 5 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

உலக அளவில் இந்த நிலை 3.54 சதவீதமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு, மார்ச் 10 முதல் 16 வரை குளுக்கோமா வாரம் என்று அறியப்படுகிறது, மேலும் இந்த ஆண்டின் கருப்பொருள் குளுக்கோமா இல்லாத உலகத்திற்காக ஒன்றுபடுவோம் என்பதாகும்.

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும், குறிப்பாக தங்கள் குடும்பத்தில் யாருக்காவது அல்லது உறவினர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

குளுக்கோமாவை இனங்காணுவதன் மூலம் குருட்டுத்தன்மையை தடுக்க முடியும் எனவும் உலகளவிலும் இந்நாட்டிலும் குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று குளுக்கோமா எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் உள்ள கண் சிகிச்சை நிலையங்கள், காலி, புத்தளம், பதுளை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நோயாளர்களுக்கு வைத்தியர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதுடன் குளுக்கோமா விஷேட கண் மருத்துவ மனைகளை நடத்தும்.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...