tamilni 410 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் தூதரகம்

Share

இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் தூதரகம்

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய பிரதமரை நியமிப்பதற்கான இரகசிய நடவடிக்கையை மேற்கத்திய தூதரகம் ஆரம்பித்துள்ளதாகவும், அதன் பிரகாரம் முன்னாள் அதிபர் ஒருவர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாகவும், அதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு இருப்பதாகவும் கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படும் தினேஷுக்கு பல சக்திவாய்ந்த அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு பிரதமரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமரின் பதவியை மாற்றும் நடவடிக்கைக்கு பங்களித்த இந்த தூதரகம், தற்போதைய அதிபர் ரணிலை முன்னிலைப்படுத்துவதற்கான இரகசிய நடவடிக்கையையும் மேற்கொண்டதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்திருந்தன.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கரியமில வைப்பு கொள்கையின் கீழ் இலங்கைக்கு 12 பில்லியன் டொலர்கள் கிடைக்க உள்ளதாகவும், இது முன்னாள் நோர்வே சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் உதவியுடன் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பணத்தில் அதிபர் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நாட்டிற்கான மேற்கத்தைய தூதுவர் இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாகச் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார், மேலும் அவர் இந்த நாட்களில் அரசியல் அரங்கில் முக்கிய நபராக மாறி வருகிறார்.

தினேஷ் குணவர்தன பிரதமர்பதவியில் இருந்து விலகி, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு அந்த பதவியை வழங்குமாறு பொதுஜன பெரமுன விடுத்த கோரிக்கை இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவின் ஆதரவு இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், முன்னாள் அதிபர்களான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் இன்னும் அரசியல் களத்தில் இருப்பதுடன், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வெடுப்பது விசேட அம்சமாகும் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...