10 31
இலங்கைசெய்திகள்

இராஜதந்திரிகளுக்கு பயிற்சி அளிக்க ஐ.நா.வுடன் விசேட ஒப்பந்தம்

Share

இராஜதந்திரிகளுக்கு பயிற்சி அளிக்க ஐ.நா.வுடன் விசேட ஒப்பந்தம்

ஐக்கிய நாடுகளின்(UN) பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் இலங்கையின் இராஜதந்திரிகளுக்கு விசேட பயிற்சியளிக்கும் திட்டம் தொடர்பில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சுக்கு இடையில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இது 03 வருட காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எனவும், கூட்டு வேலை கட்டமைப்பொன்று இதன்மூலம் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கையொப்பமிட உத்தேசிக்கப்பட்டுள்ள வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பரஸ்பர நன்மைகள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், பயிற்சி மற்றும் கற்றல் ஆதரவு, இராஜதந்திரிகளுக்கு பயிற்சி, பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் நெருக்கடி மேலாண்மை மற்றும் புவி-தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியவை ஐக்கிய நாடுகள் சபையிடம் இருந்து கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவது தொடர்பான செயற்திட்டங்கள் இதற்குள் அடங்குவதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...