11 23
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களுக்கு போலி விண்ணங்களை வழங்கிய அமெரிக்க தம்பதி : விதிக்கப்படவுள்ள தண்டனை

Share

இலங்கையர்களுக்கு போலி விண்ணங்களை வழங்கிய அமெரிக்க தம்பதி : விதிக்கப்படவுள்ள தண்டனை

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தம்பதியினர், இலங்கையிலிருந்து வரும் வாடிக்கையாளர்களின் சார்பாக தஞ்சம் கோரி போலியான விண்ணப்பங்களை சமர்ப்பித்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

61வயதான சுவைருல் அமீர் (Zuwairul Ameer) மற்றும் மற்றும் 63வயதான கிளாடெட் பீரிஸ் (Claudette Pieries) ஆகியோரே தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

குறைந்தது 2007 ஆம் ஆண்டு முதல் இந்த நடவடிக்கையை தம்பதியினர் மேற்கொண்டு வந்துள்ளதோடு, நீதிமன்ற ஆவணங்களின்படி, தம்பதியினர் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் குறைந்தது 1,000 டொலர்களை வசூலித்துள்ளனர்.

சுவைருலுக்கு எதிரான குற்றவியல் முறைப்பாடு ஒன்றில், அவர் 2020 மே மாதம் இலங்கையில் இருந்து நாட்டிற்கு வந்த ஒருவரைச் சந்தித்தார் அவர், சுவைருலிடம் இலங்கையில் தவறாக நடத்தப்பட்ட உண்மைக் கதையை கூறினார்.

எனினும் அமீர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தபோது, குறித்த இலங்கையர், அவரது நாட்டில் பொலிஸாரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டார் என்ற பொய்யான தகவலை உள்ளிட்டுள்ளார்.

இதுபோன்ற விபரங்கள் இல்லாவிட்டால் புகலிடம் வழங்கப்பட மாட்டாது என்று சுவைருல், குறித்த இலங்கையரிடம் தெரிவித்துள்ளதாக நீதிமன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 2025 பெப்ரவரி 25 ஆம் திகதியன்று குறித்த தம்பதியினருக்கு தண்டனை அறிவிக்கப்படவுள்ளது

இதன்போது அவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் 250,000 டொலர் அபராதமும் விதிக்கப்படலாம் என்று சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...