11 23
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களுக்கு போலி விண்ணங்களை வழங்கிய அமெரிக்க தம்பதி : விதிக்கப்படவுள்ள தண்டனை

Share

இலங்கையர்களுக்கு போலி விண்ணங்களை வழங்கிய அமெரிக்க தம்பதி : விதிக்கப்படவுள்ள தண்டனை

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தம்பதியினர், இலங்கையிலிருந்து வரும் வாடிக்கையாளர்களின் சார்பாக தஞ்சம் கோரி போலியான விண்ணப்பங்களை சமர்ப்பித்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

61வயதான சுவைருல் அமீர் (Zuwairul Ameer) மற்றும் மற்றும் 63வயதான கிளாடெட் பீரிஸ் (Claudette Pieries) ஆகியோரே தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

குறைந்தது 2007 ஆம் ஆண்டு முதல் இந்த நடவடிக்கையை தம்பதியினர் மேற்கொண்டு வந்துள்ளதோடு, நீதிமன்ற ஆவணங்களின்படி, தம்பதியினர் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் குறைந்தது 1,000 டொலர்களை வசூலித்துள்ளனர்.

சுவைருலுக்கு எதிரான குற்றவியல் முறைப்பாடு ஒன்றில், அவர் 2020 மே மாதம் இலங்கையில் இருந்து நாட்டிற்கு வந்த ஒருவரைச் சந்தித்தார் அவர், சுவைருலிடம் இலங்கையில் தவறாக நடத்தப்பட்ட உண்மைக் கதையை கூறினார்.

எனினும் அமீர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தபோது, குறித்த இலங்கையர், அவரது நாட்டில் பொலிஸாரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டார் என்ற பொய்யான தகவலை உள்ளிட்டுள்ளார்.

இதுபோன்ற விபரங்கள் இல்லாவிட்டால் புகலிடம் வழங்கப்பட மாட்டாது என்று சுவைருல், குறித்த இலங்கையரிடம் தெரிவித்துள்ளதாக நீதிமன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 2025 பெப்ரவரி 25 ஆம் திகதியன்று குறித்த தம்பதியினருக்கு தண்டனை அறிவிக்கப்படவுள்ளது

இதன்போது அவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் 250,000 டொலர் அபராதமும் விதிக்கப்படலாம் என்று சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...

rain
செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...