11 23
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களுக்கு போலி விண்ணங்களை வழங்கிய அமெரிக்க தம்பதி : விதிக்கப்படவுள்ள தண்டனை

Share

இலங்கையர்களுக்கு போலி விண்ணங்களை வழங்கிய அமெரிக்க தம்பதி : விதிக்கப்படவுள்ள தண்டனை

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தம்பதியினர், இலங்கையிலிருந்து வரும் வாடிக்கையாளர்களின் சார்பாக தஞ்சம் கோரி போலியான விண்ணப்பங்களை சமர்ப்பித்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

61வயதான சுவைருல் அமீர் (Zuwairul Ameer) மற்றும் மற்றும் 63வயதான கிளாடெட் பீரிஸ் (Claudette Pieries) ஆகியோரே தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

குறைந்தது 2007 ஆம் ஆண்டு முதல் இந்த நடவடிக்கையை தம்பதியினர் மேற்கொண்டு வந்துள்ளதோடு, நீதிமன்ற ஆவணங்களின்படி, தம்பதியினர் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் குறைந்தது 1,000 டொலர்களை வசூலித்துள்ளனர்.

சுவைருலுக்கு எதிரான குற்றவியல் முறைப்பாடு ஒன்றில், அவர் 2020 மே மாதம் இலங்கையில் இருந்து நாட்டிற்கு வந்த ஒருவரைச் சந்தித்தார் அவர், சுவைருலிடம் இலங்கையில் தவறாக நடத்தப்பட்ட உண்மைக் கதையை கூறினார்.

எனினும் அமீர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தபோது, குறித்த இலங்கையர், அவரது நாட்டில் பொலிஸாரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டார் என்ற பொய்யான தகவலை உள்ளிட்டுள்ளார்.

இதுபோன்ற விபரங்கள் இல்லாவிட்டால் புகலிடம் வழங்கப்பட மாட்டாது என்று சுவைருல், குறித்த இலங்கையரிடம் தெரிவித்துள்ளதாக நீதிமன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 2025 பெப்ரவரி 25 ஆம் திகதியன்று குறித்த தம்பதியினருக்கு தண்டனை அறிவிக்கப்படவுள்ளது

இதன்போது அவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் 250,000 டொலர் அபராதமும் விதிக்கப்படலாம் என்று சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...