image 1000x630 1
இலங்கைபிராந்தியம்

தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம் ஒக்டோபர் 21 அன்று நாடாளுமன்றில் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பு

Share

குழுநிலையில் திருத்தங்களுடன் கூடிய தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இன்று (அக்டோபர் 17) அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரத்துடன், தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தும் சட்டமூலம், 2025 ஜூன் மாதம் 03 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பு விவாதத்தில் நிறைவேற்றப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வேண்டுகோளின் பேரில், சட்டவரைஞர் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து, குழுநிலையில் முன்மொழியப்பட வேண்டிய பல சிறிய திருத்தங்களை அடையாளம் கண்டுள்ளது.

அதன்படி, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திருத்தங்கள், ஒக்டோபர் 21 ஆம் திகதி எந்த விவாதமும் இன்றி குழுநிலையின்போது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர், சட்டமூலம் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு அதே நாளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 19
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதீத உயர்வு: அவுன்ஸ் ஒன்று 4,700 டொலர்களைக் கடந்தது!

ஈரானுடனான மோதல் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரக்கூடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...

Untitled 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் கௌரவம் காக்கப்பட வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்!

இலங்கையின் மூத்த குடிமக்கள் அனைவரும் தங்களது உரிமைகள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் ஆரோக்கியத்துடன்...

Untitled 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கள்ளச்சாராயச் சுற்றிவளைப்பு: 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குளவித் தாக்குதலில் காயம்!

நுவரெலியா மாவட்டம், கோட்மலை வேடமுல்ல ரம்பொடை பகுதியில் உள்ள வனக் காப்பகத்திற்குள் இயங்கி வந்த கள்ளச்சாராய...