rtjy 223 scaled
இலங்கைசெய்திகள்

காணாமல்போன புத்தர் சிலையை கேட்டு அடம் பிடிக்கும் அம்பிட்டிய தேரர்

Share

காணாமல்போன புத்தர் சிலையை கேட்டு அடம் பிடிக்கும் அம்பிட்டிய தேரர்

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்டோர் கொண்டு வந்து வைத்த புத்தர் சிலை காணாமல் போயுள்ள நிலையில், அங்கு தற்சமயம் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு – மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் உள்ளிட்டோர் இணைந்து குறித்த மயிலத்தமடு – மாதவனை பகுதியில் புத்தர் சிலை ஒன்றை கொண்டு வந்து வைத்திருந்தனர்.

இந்தநிலையில், குறித்த புத்தர் சிலை நேற்று இரவு காணாமல் போயுள்ளதுடன், அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினரால் அங்கு பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதியில் இருந்து சிங்கள குடியேற்றவாசிகளை அகற்றி அவர்களுக்கு அவர்களது பகுதிகளிலேயே இடம் ஒதுக்கி கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்தநிலையில், அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் மறுநாளே அந்த பகுதியில் புத்தர் சிலை ஒன்றை வைத்து அந்த பகுதியில் இருந்து வெளியேற மாட்டோம் இது எமக்கு சொந்தமான பகுதி என தெரிவித்து உரிமை கொண்டாடியுள்ளனர்.

எனினும், அங்கு வைக்கப்பட்ட புத்தர் சிலை நேற்று இரவு காணாமல் போயுள்ள நிலையில் அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அப்பகுதிக்கு சென்ற அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் தலைமையிலான குழுவினர் கரடியணாறு பொலிஸ் பொறுப்பதிகாரியை மிக மோசமான வார்த்தைகளால் பேசியதோடு அந்த பகுதியில் உள்ள அத்துமீறிய குடியேற்றவாசிகளை தூண்டிவிட்டு அங்குள்ள தமிழ் பண்ணையாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...