rtjy 223 scaled
இலங்கைசெய்திகள்

காணாமல்போன புத்தர் சிலையை கேட்டு அடம் பிடிக்கும் அம்பிட்டிய தேரர்

Share

காணாமல்போன புத்தர் சிலையை கேட்டு அடம் பிடிக்கும் அம்பிட்டிய தேரர்

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்டோர் கொண்டு வந்து வைத்த புத்தர் சிலை காணாமல் போயுள்ள நிலையில், அங்கு தற்சமயம் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு – மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் உள்ளிட்டோர் இணைந்து குறித்த மயிலத்தமடு – மாதவனை பகுதியில் புத்தர் சிலை ஒன்றை கொண்டு வந்து வைத்திருந்தனர்.

இந்தநிலையில், குறித்த புத்தர் சிலை நேற்று இரவு காணாமல் போயுள்ளதுடன், அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினரால் அங்கு பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதியில் இருந்து சிங்கள குடியேற்றவாசிகளை அகற்றி அவர்களுக்கு அவர்களது பகுதிகளிலேயே இடம் ஒதுக்கி கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்தநிலையில், அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் மறுநாளே அந்த பகுதியில் புத்தர் சிலை ஒன்றை வைத்து அந்த பகுதியில் இருந்து வெளியேற மாட்டோம் இது எமக்கு சொந்தமான பகுதி என தெரிவித்து உரிமை கொண்டாடியுள்ளனர்.

எனினும், அங்கு வைக்கப்பட்ட புத்தர் சிலை நேற்று இரவு காணாமல் போயுள்ள நிலையில் அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அப்பகுதிக்கு சென்ற அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் தலைமையிலான குழுவினர் கரடியணாறு பொலிஸ் பொறுப்பதிகாரியை மிக மோசமான வார்த்தைகளால் பேசியதோடு அந்த பகுதியில் உள்ள அத்துமீறிய குடியேற்றவாசிகளை தூண்டிவிட்டு அங்குள்ள தமிழ் பண்ணையாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

Share
தொடர்புடையது
Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...

default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம்,...

1185212 anbu
செய்திகள்இலங்கை

யாருடன் கூட்டணி? – ராமதாஸ் இன்று சென்னை வருகை; நாளை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு...