tamilni 95 scaled
இலங்கைசெய்திகள்

அம்பிட்டிய தேரருக்கு சபையில் பதிலடி கொடுத்த சாணக்கியன்

Share

அம்பிட்டிய தேரருக்கு சபையில் பதிலடி கொடுத்த சாணக்கியன்

மட்டக்களப்பு – மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தமிழ் மக்கள் துண்டு துண்டாக வெட்டுவேன் என தெரிவித்துள்ளதுடன், என்னையும் எனது மக்களையும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். இந்த பௌத்த பிக்குவுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பில் இருக்கும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் எனது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் வகையில் செயற்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் கட்டளையை பொலிசார் நடைமுறைப் படுத்தவில்லை என்பதனை வலியுறுத்தியிருந்தேன்.

அந்த விடயத்தை இந்த தேரர் வேறு வகையில் திரிபுப்படுத்தி நான் நாடாளுமன்றத்தில் பேசும் போது என்னை தடுக்க அங்கு முதுகெலும்புள்ள சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரும் இல்லையா என்று எனது சிறப்புரிமையை மீறும் ஓர் காணொளியினை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் கிழக்கில் வசிக்கும் தமிழர்கள் ஒவ்வெருவரையும் துண்டு துண்டாக வெட்டுவேன் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.

இவ்வாறாக என்னையும் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் இந்த பௌத்த பிக்குவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...