3
இலங்கைசெய்திகள்

அம்பகமுவ பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம்

Share

அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய மக்கள் சத்தியின் உறுப்பினர் கபில நாகந்தல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான முதலாம் கன்னி அமர்வு மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எம்.கே.சி.கே அத்தபத்து தலைமையில் இன்று (26) அம்பகமுவ பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது 21 உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் திறந்த வாக்கெடுப்பினூடாக தலைவர் தெரிவு இடம்பெற்றதுடன் உப தலைவர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டது.

இதன்போது பகிரங்க வாக்கெடுப்பினூடாக தலைவர் தெரிவு இடம்பெற்றதில் 11 வாக்குகளை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாகந்தலாகே தொன் கபில நாகந்தல தலாவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 06, ஐக்கிய தேசிய கட்சி 01, ஈரேஸ் ஜனநாயக முன்னணி 01, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன 01, சர்வஜன அதிகாரம் 01, சுயேற்சைக்குழு 01 என 11 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சார்பில் அமரசிங்க வசந்த பிரியதர்சன போட்டியிட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் 08, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 02 வாக்குகள் என 10 வாக்குகளை பெற்றார்.இலங்கை விடுதி

உப தவிசாளர் தெரிவிற்கு இரகசிய வாக்கெடுப்பிற்கு அதிக ஆதரவு கிடைத்த நிலையில் இரகசிய வாக்கெடுப்பில் சுயேட்சைக்குழு உறுப்பினர் விதான கமகே ஹெலப்பிரிய நந்தராஜ் தேசிய மக்கள் சார்பில் உடகெதரலாகே முதியான்சலாகே ஹரிந்த ஆசிரி உடகே ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

இதன் போது தேசிய மக்கள் சக்தின் உறுப்பினர் 12 வாக்குகளை பெற்று உப தலைவராக தெரிவானர்.

சுயேட்சைக்குழு உறுப்பினர் நர்ந்தராஜ் 07 வாக்குகளை பெற்றதுடன் இரண்டு வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக கணிக்கப்பட்டது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...