2 42
இலங்கைசெய்திகள்

பிரபல அரசியல்வாதியின் பாரிய மோசடிகள்! சிக்கலில் கெஹலியவின் மகள் – காட்டிக்கொடுத்த அதிகாரி

Share

தனது கணக்கில் பெறப்பட்ட அனைத்து பணத்தையும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் அமலி ரம்புக்வெல்ல பெற்றுக்கொண்டதாக கெஹலியவின் செயலாளர் நிஷாந்த பண்டார பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பு தலைமை நீதிபதி தனுஜா லக்மாலி முன்னிலையில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

தனது பெயரில் ஒரு கணக்கு திறக்கப்பட்டிருந்தாலும், அந்தக் கணக்கிற்கான புத்தகம் உட்பட அனைத்தும் அமலி ரம்புக்வெல்லவிடம் இருந்ததாக பஸ்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடகம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக பணியாற்றிய 2021/2023ஆம் ஆண்டு காலப்பகுதியில், கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர்களாக 15 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கூடுதல் நேரக் கொடுப்பனவுகளை அவரது தனிப்பட்ட செலவுகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம், அரசாங்கத்திற்கு 80 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்லவின் இணைப்புச் செயலாளராக பணியாற்றிய நிஷாந்த பண்டார பஸ்நாயக்கவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் போது, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்த தகவல்களை நேற்று வெளியிட்டது.

சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றத்தை குறிக்கும் அறிக்கையை சமர்ப்பித்த இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வந்த பஸ்நாயக்கவிடம் வாக்குமூலத்தை பெற்ற பின்னர் அவரைக் கைது செய்ததாக தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...