24 665a4a1eb5511
இலங்கைசெய்திகள்

ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு கொடுப்பனவு

Share

ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு கொடுப்பனவு

ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் முதியோர் கொடுப்பனவுக்கு தகுதியுடையவர்கள் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வசும நிவாரணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், இதுவரை வழங்கப்பட்டு வந்த முதியோர் கொடுப்பனவு நிறுத்தப்படவில்லை நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக கொடுப்பனவுகள் தாமதமாகியதாகவும் இந்த ஜூன் இரண்டாவது வாரத்தின் பின்னர் முதியோர் கொடுப்பனவை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கொடுப்பனவை அந்தந்த பிரதேச செயலகங்களில் இருந்து சாதாரண முறையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

மேலும், ஜூன் மாதத்துக்கான உதவித்தொகையை அதே மாதத்தில் வழங்குவதுடன், முதியோர் கொடுப்பனவை உரிய வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையின் கீழ் நலன்புரி நன்மைகள் சபை வரவு வைக்கும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...