6 5
இலங்கைசெய்திகள்

குறைக்கப்படாத மின் கட்டணம்: அநுர அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம்

Share

குறைக்கப்படாத மின் கட்டணம்: அநுர அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம்

மின்சார கட்டணத்தை குறைக்காமல், தற்போதுள்ள கட்டணத்தை அடுத்த 6 மாதங்களுக்கும் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ள நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஒக்டோபர் மாத இறுதியில் முன்வைக்கப்படும் திருத்தத்தின் மூலம் மின்சாரக் கட்டணத்தை 6 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தும் ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியாது என மின்சார சபை தெரிவித்துள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மின்சார கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்க முடியும் என தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலின் போது மிகத் தெளிவாக தெரிவித்திருந்த பின்னணியில், மின் கட்டணத்தை திருத்த வேண்டாம் என இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

அத்துடன், 2024 செப்டெம்பர் மாதத்திற்குள் மின்சார சபையின் நிகர லாபம் 136 பில்லியனைத் தாண்டியுள்ள பின்னணியிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை மேலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதேவேளை, கடந்த பல வாரங்களாக, நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால், தினசரி நீர் மின் உற்பத்தி 5500 மெகாவாட் மணிநேரத்தை தாண்டியுள்ளதுடன், எரிபொருள் அடிப்படையிலான மின்சார உற்பத்தி 1.3 சதவீதமாக குறைந்துள்ளது.

இதன்படி, மின்சார சபை 200 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியிருப்பதால், மின்சாரக் கட்டணத்தை உடனடியாகக் குறைக்குமாறு கோரி, சமகி கூட்டுத் தொழிற்சங்கமும் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...