6 5
இலங்கைசெய்திகள்

குறைக்கப்படாத மின் கட்டணம்: அநுர அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம்

Share

குறைக்கப்படாத மின் கட்டணம்: அநுர அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம்

மின்சார கட்டணத்தை குறைக்காமல், தற்போதுள்ள கட்டணத்தை அடுத்த 6 மாதங்களுக்கும் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ள நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஒக்டோபர் மாத இறுதியில் முன்வைக்கப்படும் திருத்தத்தின் மூலம் மின்சாரக் கட்டணத்தை 6 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தும் ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியாது என மின்சார சபை தெரிவித்துள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மின்சார கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்க முடியும் என தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலின் போது மிகத் தெளிவாக தெரிவித்திருந்த பின்னணியில், மின் கட்டணத்தை திருத்த வேண்டாம் என இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

அத்துடன், 2024 செப்டெம்பர் மாதத்திற்குள் மின்சார சபையின் நிகர லாபம் 136 பில்லியனைத் தாண்டியுள்ள பின்னணியிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை மேலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதேவேளை, கடந்த பல வாரங்களாக, நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால், தினசரி நீர் மின் உற்பத்தி 5500 மெகாவாட் மணிநேரத்தை தாண்டியுள்ளதுடன், எரிபொருள் அடிப்படையிலான மின்சார உற்பத்தி 1.3 சதவீதமாக குறைந்துள்ளது.

இதன்படி, மின்சார சபை 200 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியிருப்பதால், மின்சாரக் கட்டணத்தை உடனடியாகக் குறைக்குமாறு கோரி, சமகி கூட்டுத் தொழிற்சங்கமும் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய வீடுகளுக்கு நீர் வழங்கல் சபையின் அனுமதி கட்டாயம்: புதிய நடைமுறை விரைவில்!

இலங்கையில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் போது, வீட்டின் உட்புறக் குழாய் கட்டமைப்புகளுக்கு (Internal Plumbing) நீர்...

world 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூரியன் நாளை நேர் உச்சியில்: பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலைக்கு மத்தியில், நாட்டின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 07, 2026)...

world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...