3 4
இலங்கைசெய்திகள்

ஸ்தம்பிதம் அடைந்த நாடு: அநுர அரசு மீது பாய்ந்த குற்றச்சாட்டு

Share

கடந்த நிர்வாகத்தின் போது வேகமாக வளர்ச்சியடைந்து வந்த நாடு, தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக சிறிலங்க பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று (28) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது, மேலும் உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், “இந்த நாடு வேலை செய்வதற்கு ஒரு சிறந்த இடமாக இருந்தது.இந்த நாடு வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருந்து, ஆனால் தற்போது ஸ்தம்பிதமடைய செய்துள்ளனர்.

இதனை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியே இதனை செய்துள்ளது.

இவ்வாறு செய்வதற்கு, அவர்கள் இரண்டு விஷயங்களைப் பயன்படுத்தினர், ஒன்று சமூகத்தில் பொய்களைப் பரப்புவது. மற்றொன்று அந்தப் பொய்கள் மூலம் மக்களை ஏமாற்றுவது.

எனவே இந்த நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்பினால், இந்த நாட்டில் தங்கள் எதிர்காலத்தை நேசிக்கும் மக்கள், ஒரு நாடு பொய் சொல்வதன் மூலமும், மற்றவர்களை வெறுப்பதன் மூலமும், உழைக்கும் மக்களை விமர்சிப்பதன் மூலமும் முன்னேறாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...