16 2 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் கட்டாக்காலி நாய்கள்: நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

Share

நாட்டில் அதிகரிக்கும் கட்டாக்காலி நாய்கள்: நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6.2 மில்லியன் கட்டாக்காலி நாய்கள் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய (07.03.2024) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

“சீகிரியா போன்ற சுற்றுலாப் பகுதிகளில் கட்டாக்காலி நாய்கள் சுற்றித் திரிவது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

கிடைக்கப்பெற்றுள்ள புள்ளிவிபரங்களின்படி நாட்டில் 6.2 மில்லியன் கட்டாக்காலி நாய்கள் காணப்படுகின்றன.

சுற்றுலாப் பகுதிகளிலும் இது பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளமையால், இதற்கு தீர்வு காண்பது முக்கியம்“ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் விலங்குகளுக்கு ஏற்படும் தீங்குகளை குறைப்பதற்காக புதிய சட்டங்களை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், விலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எல்லாவற்றிற்கும் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...