16 2 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் கட்டாக்காலி நாய்கள்: நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

Share

நாட்டில் அதிகரிக்கும் கட்டாக்காலி நாய்கள்: நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6.2 மில்லியன் கட்டாக்காலி நாய்கள் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய (07.03.2024) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

“சீகிரியா போன்ற சுற்றுலாப் பகுதிகளில் கட்டாக்காலி நாய்கள் சுற்றித் திரிவது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

கிடைக்கப்பெற்றுள்ள புள்ளிவிபரங்களின்படி நாட்டில் 6.2 மில்லியன் கட்டாக்காலி நாய்கள் காணப்படுகின்றன.

சுற்றுலாப் பகுதிகளிலும் இது பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளமையால், இதற்கு தீர்வு காண்பது முக்கியம்“ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் விலங்குகளுக்கு ஏற்படும் தீங்குகளை குறைப்பதற்காக புதிய சட்டங்களை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், விலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எல்லாவற்றிற்கும் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...