16 2 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் கட்டாக்காலி நாய்கள்: நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

Share

நாட்டில் அதிகரிக்கும் கட்டாக்காலி நாய்கள்: நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6.2 மில்லியன் கட்டாக்காலி நாய்கள் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய (07.03.2024) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

“சீகிரியா போன்ற சுற்றுலாப் பகுதிகளில் கட்டாக்காலி நாய்கள் சுற்றித் திரிவது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

கிடைக்கப்பெற்றுள்ள புள்ளிவிபரங்களின்படி நாட்டில் 6.2 மில்லியன் கட்டாக்காலி நாய்கள் காணப்படுகின்றன.

சுற்றுலாப் பகுதிகளிலும் இது பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளமையால், இதற்கு தீர்வு காண்பது முக்கியம்“ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் விலங்குகளுக்கு ஏற்படும் தீங்குகளை குறைப்பதற்காக புதிய சட்டங்களை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், விலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எல்லாவற்றிற்கும் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....