தோல்வியில் முடிந்த ரணிலின் முயற்சி!
இலங்கைசெய்திகள்

தோல்வியில் முடிந்த ரணிலின் முயற்சி!

Share

தோல்வியில் முடிந்த ரணிலின் முயற்சி!

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி கூட்டம் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அதிபர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

இன்றைய சர்வகட்சி கூட்டம் எந்தவொரு தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்ததாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஐ.பி.சி. தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மக்களின் வாக்குகளின் ஊடாக அதிபராக தெரிவு செய்யப்படாமையினால் அதிபர் தேர்தலை நடத்தி ஆட்சிப்பீடம் ஏறிய பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சிங்கள பேரினவாத கட்சிகள் தெரிவித்துள்ளன.

எனினும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தான் அதிபரிடம் வலியுறுத்தியதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் அதிபரால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு அதிபரின் வழமையான அரசியல் செயற்பாட்டின் ஒரு அங்கம் என ஜக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

சர்வகட்சி மாநாட்டில் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட நிலையில் ஜக்கிய மக்கள் சக்தி அறிக்கையிடல் மூலம் இவ்விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளது.

வடக்கு கிழக்குப் பிரச்சினை உடனடியாக எழவில்லை எனவும் பல தசாப்தங்களாக பல்வேறு அரசாங்கங்கள் இப்பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...