tamilni 489 scaled
இலங்கைசெய்திகள்

மதுபான பாவனையால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நட்டம்

Share

இலங்கையில் மதுபான பயன்பாடு காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு 237 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியாக இவ்வாறு நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மதுபான மற்றும் போதைப் பொருள் தகவல் மத்திய நிலையத்தின் ஆலோசகர் புபுது சுமனசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மதுபான பயன்பாட்டினால் ஏற்பட்ட வீதி விபத்துக்கள், கைத்தொழிற்சாலைகளில் உற்பத்தி வீழ்ச்சி, வீட்டுத் தலைவர்கள் அகால மரணமடைதல், மருந்துப் பொருட்களுக்கு அதிகளவில் செலவிட நேரிடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டிலும் மதுபான விற்பனையின் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் பொருளாதார நலன்களை விடவும் மதுபான பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய சுகாதார கேடுகளுக்காக செலவிட நேரிட்டுள்ளது சுமனசேர தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டில் மதுபான விற்பனையின் மூலம், மதுவரித் திணைக்களம் 165.2 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளது.

எனினும், மதுபான பயன்பாட்டினால் ஏற்பட்ட சுகாதார மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்காக இந்த வருமானத்தை விடவும் கூடுதல் தொகை செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வயது வந்த சனத்தொகையில் 40 வீதமான ஆண்கள் மதுபானம் அருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.

மதுபான பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொலிஸார் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை மேற்கொள்ள நேரிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...