24 667a9ed5b09e4
இலங்கைசெய்திகள்

கணித பிரிவில் கல்வி கற்றுவந்த உயர்தர மாணவனின் விபரீத முடிவு

Share

கணித பிரிவில் கல்வி கற்றுவந்த உயர்தர மாணவனின் விபரீத முடிவு

கம்பளையில் 18 வயதான உயர்தர மாணவரொருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இவர் க.பொ.த சாதாரண தரத்தில் 8 ஏ சித்திகள் மற்றும் ஒரு பி சித்தியை பெற்று உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி பயின்று வந்துள்ளார்.

குறித்த மாணவன் தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்ற பின் சகோதரன், இளைஞரின் அறைக்கு வந்து பார்த்த போது அவர் சுடப்பட்ட நிலையில் கிடப்பதை அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் உடனடியாக சகோதரன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்த மாணவன் பெரும்பாலும் இணையவழி பாடங்களைச் செய்துள்ளதோடு, கணினி மற்றும் தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே அவர் இணையவழி விளையாட்டிற்கு அடிமையாகி, தேர்வை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இளைஞர் இறந்த இடத்திலிருந்து கத்தியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், தனது தந்தைக்கு சொந்தமான துப்பாக்கியையே அவர் பயன்படுத்தியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...