26 8
இலங்கைசெய்திகள்

திடீரென செயலிழந்த இரத்மலானை விமான நிலைய இயங்குதளம்: தடுமாறிய அதிகாரிகள்

Share

திடீரென செயலிழந்த இரத்மலானை விமான நிலைய இயங்குதளம்: தடுமாறிய அதிகாரிகள்

இலங்கைக்கு மேல் பயணிக்கும் சர்வதேச விமானங்கள் மற்றும் இலங்கைக்கு வரும் விமானங்களை கையாளும் இரத்மலானை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் இயங்குதளம் திடீரென செயலிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் (14 ஆம் திகதி) முதல் நேற்று காலை (15 ஆம் திகதி) வரையில் சுமார் 12 மணிநேரம் செயலிழந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இதுவே முதல் முறை என்றும் விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அதிகாரிகளால் அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக கையாள முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வி.எச்.எஃப். விமானத்துடன் தொடர்பு கொள்ள 124.9 அதிர்வெண் பயன்படுத்திய போது திடீரென்று அந்த அலைவரிசையின் செயற்பாடுகள் தடைப்பட்டன.

திடீரென செயலிழந்த இரத்மலானை விமான நிலைய இயங்குதளம்: தடுமாறிய அதிகாரிகள் | Aircraft Platform That Has Suddenly Shut Down

இதன் காரணமாக வானில் பறக்கும் விமானங்களுடனான தொடர்புகள் தடைப்பட்டன. கணினியை மீட்டெடுக்க மின்னணு பொறியாளர்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

இந்நிலையில் கட்டுநாயக்க விமான பிரிவில் உதவி பெற்று இரத்மலானை விமான நிலைய உத்தியோகத்தர்களை கட்டுநாயக்கவிற்கு அனுப்பி அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து செயலிழந்த விமான அமைப்பை நேற்றைய தினம் (15 ஆம் திகதி) பொறியாளர்கள் மீட்டெடுத்துனர்.

இலங்கை வான்பரப்பிலிருந்து 15000 அடி உயரத்தில் பறக்கும் அனைத்து விமானங்களும் இரத்மலானையில் உள்ள பிரதான வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கட்டுப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...