Untitled 1 Recovered Recovered Recovered Recovered
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பில் வெளியான தகவல்

Share

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து செல்லும் விமானங்கள் நேற்று மாலை 05.00 மணியின் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 80 சதவீதம் விமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய செயல்பாட்டுக் குழுவின் தலைவர் ரோஷனி மசகோரல தெரிவித்துள்ளார்.

எனினும் கட்டார் எயார்வேஸ் விமான நடவடிக்கைகள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என ரோஷனி மசகோரல குறிப்பிட்டுள்ளார்.

டோஹா விமான நிலையத்தில் பணியாற்றும் கட்டார் எயார்வேஸ் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இன்னும் தேவைக்கேற்ப பணிக்கு வராமையே இதற்கான காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்று விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட அனைத்து இலங்கை விமானங்களும் தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.இலங்கை உணவகம்

அத்துடன் விமான நடவடிக்கைகளுக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதென இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் சுனில் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

மாற்று விமான வழிகளைப் பயன்படுத்துவதாலும், எரிபொருளை பெறுவதற்காக வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடுவதாலும் சிறிய விமான தாமதங்கள் ஏற்படக்கூடும்.

எனினும் இன்று அனைத்து விமானங்களும் திட்டமிட்டபடி செயற்படும் என எதிர்பார்ப்பதாக சுனில் ஜெயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...