Untitled 1 Recovered Recovered Recovered Recovered
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பில் வெளியான தகவல்

Share

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து செல்லும் விமானங்கள் நேற்று மாலை 05.00 மணியின் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 80 சதவீதம் விமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய செயல்பாட்டுக் குழுவின் தலைவர் ரோஷனி மசகோரல தெரிவித்துள்ளார்.

எனினும் கட்டார் எயார்வேஸ் விமான நடவடிக்கைகள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என ரோஷனி மசகோரல குறிப்பிட்டுள்ளார்.

டோஹா விமான நிலையத்தில் பணியாற்றும் கட்டார் எயார்வேஸ் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இன்னும் தேவைக்கேற்ப பணிக்கு வராமையே இதற்கான காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்று விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட அனைத்து இலங்கை விமானங்களும் தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.இலங்கை உணவகம்

அத்துடன் விமான நடவடிக்கைகளுக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதென இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் சுனில் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

மாற்று விமான வழிகளைப் பயன்படுத்துவதாலும், எரிபொருளை பெறுவதற்காக வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடுவதாலும் சிறிய விமான தாமதங்கள் ஏற்படக்கூடும்.

எனினும் இன்று அனைத்து விமானங்களும் திட்டமிட்டபடி செயற்படும் என எதிர்பார்ப்பதாக சுனில் ஜெயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Kandy
செய்திகள்இலங்கை

கண்டி – கீழ் கடுகண்ணாவ மண் சரிவு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; வீதி மறு அறிவித்தல் வரை மூடல்!

கண்டி – கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக...

500x300 20809002 tvkvijay29102025
செய்திகள்இந்தியா

வீட்டுக்கு நிரந்தர வீடு, உந்துருளி: மக்கள் சந்திப்பில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய் உறுதி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு...

Aswasuma Welfare benifits Board 1200px 2023 07 11 1000x600 1
செய்திகள்இலங்கை

அஸ்வெசும’ பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கின்மையால் சலுகைகள் கிடைக்கவில்லை – கணக்காய்வு அறிக்கை!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள 43,703 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குகள் இல்லாத காரணத்தினால், அவர்களுக்கான...

ticket scaled 1
செய்திகள்இலங்கை

பேருந்துப் பயணங்களுக்கு இலத்திரனியல் அட்டை கட்டணம்: திட்டம் நாளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!

பேருந்துப் பயணங்களுக்கான இலத்திரனியல் அட்டை கட்டண முறையை (Electronic Card Payment) அறிமுகப்படுத்தும் திட்டம் நாளை...