8 51
இலங்கைசெய்திகள்

காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share

காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெங்கல்” சூறாவளியின் தாக்கம் காரணமாக சில பகுதிகளில் காற்றின் தரம் இன்று (30) மோசமடையக்கூடும் என்று மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் (CEA) எச்சரித்துள்ளது.

நாள் முழுவதும் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 92 முதல் 120 வரை இருக்கலாம் என மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, குருநாகல், கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, புத்தளம், பதுளை, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காற்றின் தரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கில் இருந்து காற்று மாசுக்கள் நுழைவதால் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்து, பாதகமான வானிலையின் விளைவாக ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக இது ஏற்படுகிறது.

இந்நிலையில், வளிமண்டலத்தில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தூசி துகள்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால், சுவாச நோய்கள் உள்ளவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதிக்கப்பட்டால் மருத்துவரை அணுகவும் அறிவுறுத்தப்படுட்டுள்ளார்கள்.

Share
தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...