Screenshot 2025 12 06 184105
இலங்கைசெய்திகள்

விமானப்படையின் மீட்பு நடவடிக்கை தொடர்கிறது – 601 பேர் மீட்பு, 135 தொன் நிவாரணப் பொருட்கள் விநியோகம்!

Share

நவம்பர் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலின் தாக்கத்தால் இலங்கையின் பல மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டன. இந்த இக்கட்டான சூழ்நிலையில், மீட்புப் பணிகளில் ஈடுபட்ட விமானப்படை வீரர் நிர்மால் சியம்பலாப்பிட்டிய ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்தமை நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

இந்தத் துயரச் செய்திக்கு மத்தியிலும், இலங்கை விமானப்படை தனது முழுத் திறனையும் பயன்படுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை இடைநிறுத்தாமல் மேற்கொண்டு வருகிறது.

இதுவரை 250க்கும் மேற்பட்ட விமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஹெலிக்கொப்டர்கள், Y-12 போக்குவரத்து விமானங்கள், பீச் க்ராஃப்ட் கண்காணிப்பு விமானங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமானப்படைகளிலிருந்து கிடைக்கப் பெற்ற ஹெலிக்கொப்டர்களும் இந்த நடவடிக்கைகளில் இணைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள், பிறந்த குழந்தைகள், வெளிநாட்டுப் பிரஜைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளிகள் உட்பட 601 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

2,226 விமானப்படை வீரர்கள் நில அடிப்படையிலான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் 1,949 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 135,718 கிலோகிராம் (135.7 தொன்) உணவு, உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வான் வழியாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு நடமாடும் மருத்துவமனைகள் ஜா-எலா, சீதுவ மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 30 விமானப்படை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.

மாவிலாறு, மஹவெல்ல, கலாவெவ, பொலன்னறுவை, மனம்பிட்டிய, கலாஓயா, அநுராதபுரம், நிக்கவரெட்டிய, மல்வத்துஓயா, தோப்பூர், ராஜாங்கனை, சிலாபம், அரநாயக்க, பண்டாரவளை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மக்கள் விமானப்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

டித்வா புயல் காரணமாக உருவான இந்த பேரழிவிலிருந்து மக்களை மீட்கவும், அவசர தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இலங்கை விமானப்படை மேற்கொண்டு வரும் பணி நாடு முழுவதும் தொடர்ந்து இடம்பெறும்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...