இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 600 இற்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்புத் திட்டம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 6% நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி எயிட்ஸ் பாதிப்பினால் சுமார் 30 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தொற்று ஏற்பட்டவர்களில் ஆண்களே அதிகம். ஆண் – பெண் விகிதாசாரம் 6:1 எனும் விகிதத்தில் உள்ளது.
மேலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஏனையோர் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் எயிட்ஸ் பாதிப்பினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பாதிப்பைக் குறைக்க முடியும் என கூறப்படுகிறது.

